states

மும்பையில் 61 மாடிக் கட்டடத்தில் விபத்து: தப்பிக்க முயற்சித்தவர் பலி

மும்பை, அக்.22- மத்திய மும்பையில் உள்ள 61 அடிக்கு மாடியைக் கொண்ட குடியிருப்பில் வெள்ளிக் கிழமை முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. மும்பை குரே சாலையில் உள்ள ஒன்  அவிக்னா பார்க் கட்டடத்தின் 19-ஆவது மாடி யில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஒருவர் உயிரிழந்தார். மும்பை தீயணைப்பு துறையின் தகவலின்படி, அந்த நபர் கட்டிடத்தின் 19 வது மாடியிலிருந்து குதித்தார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. குறைந்தது 12 தீயணைப்பு வாகனங் கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

;