states

img

போலிச்சாமியார் ராம்தேவ் வாய்க்கொழுப்பு

மும்பை, நவ. 28 - போலிச்சாமியார் ராம்தேவ்,  பெண்கள் குறித்து ஆபாசமாக வும், வாய்க்கொழுப்புடனும் பேசியது  நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்கு உள்ளான நிலையில், அவர் மீது தற் போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேசிய மகளிர் ஆணைய மும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. ‘பதஞ்சலி’ என்ற கார்ப்பரேட் நிறு வனத்தின் முதலாளியாக இருப்பவர் ராம்தேவ். ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டத்தைச் சேர்ந்த இவர், தன்னை ‘யோகா குரு’ என்றும், ‘சாமியார்’ என்றும் அழைத்துக் கொண்டு, யோகா நிகழ்ச்சிகளை நடத்தினாலும், மறுபுறத்தில் பெண்களை இழிவாகப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர் ஆவார். அந்த வகையில், ராம்தேவின் ‘பதஞ்சலி’ யோகா பீடமும், மும்பை ‘மகிளா பதஞ்சலி யோகா சமிதி’யும் இணைந்து ‘யோகா அறிவியல் முகாம்’  என்ற பெயரில். கடந்த வெள்ளிக்கிழ மையன்று தானே-யில் உள்ள ஹைலேண்ட் பகுதியில் யோகா முகாம் ஒன்றை நடத்தின. 

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே, துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் உள்ளிட்ட பல  முக்கிய பிரமுகர்கள் யோகா முகாமில் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் யோகாவிற்கு உரிய  ஆடை அணிந்து யோகா செய்தனர். பயிற்சி முடிந்து, மாநாடு நடை பெற்றபோது, வேறு உடைகளை மாற்றுவதற்கு நேரம் கிடைக்காமல், யோகா உடையுடனே மாநாட்டிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இத னால் ஒருவித அசவுகரியத்துடனேயே மாநாட்டில் அந்தப் பெண்கள் அமர்ந்திருந்தனர். இதனைப் பார்த்து விட்ட யோகா பயிற்சியாளரும், போலிச்சாமியாரு மான ராம்தேவ் “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, நீங்கள் சாவகாச மாக வீட்டிற்குச் சென்றே சேலை கட்டிக்கலாம்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.  அத்துடன் நிற்காமல், “முன் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண்கள் சேலை உடுத்தியிருக்கிறீர்கள். சேலை யில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அம்ருதா (துணைமுதல்வர் மனைவி)  போல சல்வார் உடுத்திக் கொண்டிருப்ப வர்களும் அழகாகவே இருக்கிறீர்கள். பெண்கள் பொதுவாக சேலை, சல்வார்  கமீஸ் ஆகிய உடைகளில் அழகாக இருப்பார்கள். என்னைப் பொறுத்த வரை பெண்கள் எந்த உடையையும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் போதும் அழகாக இருப்பார்கள்” என்று ஆபாசமாக பேசியுள்ளார்.

மேலும், “சமூகத்திற்காகவே நீங்கள் (பெண்கள்) உடை உடுத்து கிறீர்கள். குழந்தையில் 10 வயது வரை நிர்வாணமாகத்தானே இருக்கிறோம்.. ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் 5 அடுக்குகள் கொண்ட உடைகளை அணிகிறார்கள்” என்றும் தனது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராம்தேவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ இணையதளங்களில் வெளி யான நிலையில், அது நாடு முழு வதும் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.  பல்வேறு தரப்பினரும் சமூகவலை தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். “யோகா மூலம் நிதானம் மற்றும்  ஆரோக்கியம் பற்றி அவர் (ராம்தேவ்) சமூகத்திற்குச் சொல்லும்  அதே வேளையில், அவர் பெண்களி டம் இத்தகைய இழிவான அணுகு முறையைக் கொண்டிருப்பது மிகவும் தவறானது. எல்லா ஆண்களும் பெண்களை இப்படி பார்ப்பதில்லை. நம் நாட்டில் தங்களைத் தாங்களே குரு என்று சொல்லிக் கொள்ளும் பல ஆண்கள் இது போன்ற அநாகரிகமான கருத்துக்களை தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது’’ என்று மகா ராஷ்டிர சட்டப் பேரவை துணைத்தலை வர் நீலம் கோர்ஹே கண்டனம் தெரி வித்தார். “ராம்தேவின் உண்மையான மனநிலை அவரது பேச்சு மூலம் அம்பலமானது” என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் கண்டித்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு தில்லி யில் வெள்ளை சல்வார் கமீஸ் அணிந்து  ராம்தேவ் போலீசாரை ஏமாற்ற முயன்ற போது பிடிபட்டார். இந்த நிகழ்வை மேற்கோள் காட்டியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, “அவருக்கு சேலை யும், சல்வாரும்தான் இஷ்டமென்று சொல்லியிருக்கிறார். தில்லி ராம்லீலா மைதானத்திலிருந்து ‘பதஞ்சலி பாபா’ ஏன் பெண்களின் (சல்வார் கமீஸ்) ஆடையணிந்து ஓடினார் என்பது  இப்போது புரிந்து விட்டது. அவருக்கு  பார்வைக் கோளாறு இருக்கிறது. அதனால் அவரது கருத்துகள் இப்படி  இருக்கின்றன” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா சாடினார். ‘‘சத்ரபதி சிவாஜி குறித்து ஆளுநர் சர்ச்சை கருத்து கூறும்போதும், மகா ராஷ்டிர அரசு அமைதியாக இருந்தது.  நமது கிராமங்களை கர்நாடகா எடுத்துக் கொள்ளும் என கர்நாடக  முதல்வர் கூறியபோதும் அமைதியாக  இருந்தது. தற்போது பாஜக பிரச்சாரகர் பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து இழிவான கருத்து கூறியபோதும் அமைதி காத்து வருகிறது. மகாராஷ்டிரா அரசு தனது நாக்கை  தில்லியில் அடமானம் வைத்து விட்டதா?” என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்தார்.

‘‘மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவியின் முன்பு பாபா ராம்தேவ், பெண்கள் குறித்து அசிங்கமான கருத்துகளை கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துக்காக நாட்டு மக்கள் முன்பு பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு  கேட்க வேண்டும்’ என்று தில்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் கண்டனம் தெரிவித்தார். இதனிடையே, பாபா ராம்தேவ் தனது பேச்சு குறித்து, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் 1993-இன் பிரிவு 12 (2) மற்றும் 12 (3) இன்  படி, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று  மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சாகங்கர் ராம்தேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.