மும்பை, ஏப். 11 - மும்பை ஐஐடி-யில் தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி மரண வழக்கில் 2 மாதத்திற்குப் பின், சக மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதா பாத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Technology - IIT) பி.டெக். முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர், கடந்த பிப்ரவரி 12 அன்று கல்லூரி விடுதி யின் 7-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக் குறிப்பு எதுவும் உடனடியாக கிடைக்காத நிலையில், தர்ஷனின் மர ணத்திற்கான காரணத்தை உறுதிப் படுத்த முடியவில்லை என போலீ சார் தெரிவித்தனர். ஆனால், கல்வி வளாகத்தில் சாதிய ரீதியாக காட்டப்பட்ட பாரபட்சம், அவமானம் ஆகியவையே மாணவர் சோலங்கி யின் தற்கொலைக்கு காரணம் என்று மாணவர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கல்லூரி வளாகத்தில் சாதி ரீதியிலான பாகுபாடு நடைபெற வில்லை என மும்பை ஐஐடி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவித்தது. மதிப்பெண் குறைவு காரணமாக தர்ஷன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அக்குழு தெரிவித்தது.
உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தர்ஷனின் பெற்றோர் தெரிவித்த னர். குறிப்பாக தர்ஷன் தலித் சமுதா யத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்லூரியில் சக மாணவர்கள் அவரிடம் பாகுபாடு காட்டியதாகவும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த மும்பை போலீசார், கடந்த பிப்ரவரி 28 அன்று சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தனர். இக்குழு, தர்ஷன் குடும்பத்தினர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் உட்பட 35 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது. இதனிடையே, கடந்த மார்ச் 3 அன்று தர்ஷன் தங்கியிருந்த அறையிலிருந்து கை யால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை யும் போலீசார் கைப்பற்றினர். அதில், “அர்மான் என்னை கொன்றுவிட் டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் இதனைத் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தடயவியல் துறை அதிகாரிகள் (கையெ ழுத்து நிபுணர்கள்) கடந்த வெள்ளிக் கிழமையன்று எஸ்ஐடி அதிகாரி களிடம் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், விடுதி அறையில் எடுக்கப்பட்ட குறிப்பில் இடம்பெற்றிருந்த கையெழுத்தும், உயிரிழந்த தர்ஷனின் கையெழுத் தும் ஒத்துப்போவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், தர்ஷனுடன் ஒரே அறையில் தங்கி படித்து வந்த அர்மான் இக்பால் காத்ரியை கைது செய்துள்ளதாக மும்பை காவல் துறையின் சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. அர்மான் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டு தல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரி வின் கீழ் வழக்கும் பதிவு செய்யப் பட்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து அர்மான் கூறிய கருத்து தொடர்பாக அவருக்கும் தர்ஷ னுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், “எனது மகன் மும்பை ஐஐடி-யில் சாதி ரீதி யிலான பாகுபாட்டை எதிர்கொண்டு ள்ளான். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். எனது மகன் மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டிய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தர்ஷனின் தந்தை ரமேஷ்பாய் சோலங்கி வலியுறுத்தியுள்ளார்.