states

மும்பையில் ரூ.22 கோடி ஹெராயின் பறிமுதல்

மும்பை,அக்.20- மும்பையில் 22 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில்  சியோன் எனும் பகுதியில் இருந்து இந்த போதைப் பொருளை போதை  பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.  இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கூறுகையில்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் 5 டன் கச்சா எண்ணெய் கேனில் இந்த போதைப் பொருளை  மறைத்து வைத்து கொண்டு வந்தனர். இதை ஆப்கானிஸ்தானி லிருந்து ஈரானின் சஹஹார் துறைமுகம் வழியாக மும்பையில் உள்ள நவா ஷேவா எனும் துறைமுகத்துக்கு வந்தனர் என்றும்  இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் தான் குற்றவாளி களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

;