இம்பால், செப். 10 - பாஜக ஆளும் மணிப்பூரில் மீண் டும் வன்முறை தலைதூக்கியுள்ள நிலையில், அங்கு 3 மாவட்டங் களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூர் முழுவதும் செப்டம்பர் 15 வரை இணைய சேவையை முடக்க வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பற்றவைத்த ‘பழங்குடியினர் அந்தஸ்து’ வழங்குவது தொடர்பான வாக்கு வங்கி அரசியல், குக்கி மற்றும் மெய்டெய் ஆகிய இரண்டு பிரிவினர் இடையிலான மோதலாக மாறி நிற்கிறது. வன்முறை காரண மாக, கடந்த 17 மாதங்களாக மாநிலமே அமைதியை இழந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
200க்கும் மேற்பட்டோர் பலி!
இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோரின் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. வாழ்வாதாரங்கள் பறிபோய் விட்டன. வழிபாட்டுத் தலங்கள் கூட தப்பவில்லை.
அமைதியை ஏற்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடியோ, முதல் வர் பைரேன் சிங் தலைமையிலான ஆளும் மாநில பாஜக அரசோ உருப் படியான நடவடிக்கைகள் எடுக்கா மல்- மாறாக வன்முறையை தூண் டும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மோசமான நிலைமை!
இந்நிலையில் தான், இதற்கு முன்பு உருட்டைக் கட்டைகள், துப்பா க்கிகளை கொண்டு தாக்கிக் கொண்ட இரு பிரிவினர், தற்போது டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப ங்களைப் பயன்படுத்தி குண்டுவீசித் தாக்கும் அளவிற்கு நிலைமை மோச மாகி இருக்கிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதி, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் துவங்கி இதுவரை 10க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவ் வாறு உயிரிழப்புகள் மீண்டும் அதி கரித்துள்ளதோடு, அமைதியின்மை - பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை நோக்கிப்பேரணி
இந்தப் பதற்றத்துக்கு மத்தியில் மணிப்பூர் மாநிலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திங்களன்று ஆளுநர் மாளிகை யை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாததற்காக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோச கர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
‘மணிப்பூர் வாழ்க’, ‘திறமை யற்ற அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யுங்கள்’, மாநில அரசுக்கு ஒருமித்த உத்தரவைப் பிறப்பியுங்கள் - போன்ற முழக்கங் களை எழுப்பினர்.
மாணவர்களை போலீசார், பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி பாதுகாப்புப் படை விரட்டியடித்தது.
பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் இம்பாலில் உள்ள குவைராம்பாண்ட் சந்தை யில் அமைக்கப்பட்ட முகாம்களி லேயே இரவைக் கழித்தனர்.
பின்னணியில் உள்ளவர்கள் யார்?
இதனிடையே செவ்வாயன்று 2-ஆவது நாளாகவும் மணிப்பூர் ஆளு நர் மாளிகையை நோக்கி மாணவர் கள் ஊர்வலமாக சென்றனர். ஆளு நர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவை யும் சந்தித்தனர். டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களி டம் பேசிய மாணவர் தலைவர் சி. விக்டர் சிங், ‘நாங்கள் வைத்துள்ள 6 கோரிக்கை களுக்கு பதிலளிக்க 24 மணி நேர காலக்கெடு கொடுத்துள் ளோம்.
காலக்கெடு முடிந்த பிறகு எங்கள் அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து முடிவு செய்வோம்,” என்று தெரிவித் தார்.
இணைய சேவைகளுக்குத் தடை!
இதனிடையே, மணிப்பூரில் இருந்து மத்திய பாதுகாப்புப் படையினரை வெளியேற வலியுறுத்தி ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் மணிப்பூரில் 3 மாவட்டங்களில் BNSS பிரிவு 163 (2)-ன் கீழ் தடை உத்தரவுகள் விதிக்கப் பட்டன.
மேலும், சில சமூக விரோத சக்திகள் ‘படங்கள், வெறுப்புப் பேச்சுகளை பரப்ப சமூக ஊடகங்களைப் பயன்படுத்த லாம்’ என்றும், இது மாநிலத்தில் மேலும் வன்முறையைத் தூண்டக்கூடும் என்று கூறி செப்டம்பர் 15 வரை மணிப்பூர் முழுவதும் இணைய சேவையையும் முடக்க உத்தர விடப்பட்டுள்ளது.
மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியா வசியத் துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் வராத மோடி: மக்கள் வருத்தம்
மணிப்பூர் முன்னாள் ஆளு நர் அனுசுயா உய்கே ஞாயிற்றுக்கிழமை கூறுகை யில், “பிரதமர் நரேந்திர மோடி யின் வளர்ச்சிப் பணிகள் காரண மாக மணிப்பூர் மக்கள் அவரை விரும்புகின்றனர், ஆனால் வன்முறை பாதித்த மாநிலத்திற்கு அவர் இன்னும் வருகை தராதது குறித்து சற்று வருத்தமடைந்துள்ளனர்” என்றார்.
மேலும், “மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் அரசியல் பிரச்சனை அல்ல” என்றும் அவர் கூறி னார்.