states

img

மணிப்பூர் எம்.பி.க்களுக்கு அமோக வரவேற்பு

பாஜகவின் இழிவான வகுப்புவாத அரசிய லால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வன்முறையால் பற்றி எரிந்து வரு கிறது. இந்த வன்முறைக்கு இது வரை 200க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்த நிலையில், பல லட்சம் மக்  கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு வருடமாக வன்முறை அரங்கேறி வந்தாலும், பிரதமர் மோடி இன்  னும் மணிப்பூருக்கு செல்ல வில்லை. வன்முறைக்கு வழி கோலிய மணிப்பூர் பாஜக முதல் வர் பைரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் மேலும் வன்முறையை தூண்டி  விடுகிறார். மணிப்பூருக்கு சென்  றால் அம்மாநில பொதுமக்கள் விரட்டியடிப்பார்கள் என்பதை பிரதமர் மோடி, மக்களவை தேர்த லில் மணிப்பூரில் பாஜக போட்டி யில்லை என்று கூறி  கூட்டணிக் கட்சி களுக்கு தொகுதிகளை வழங்குவ தாக பாஜக மேலிடம் மூலம் அறி வித்த நிலையில், 18ஆவது மக் களவைத் தேர்தலில் “இந்தியா”  கூட்டணி சார்பில் களமிறங்கிய காங்  கிரஸ் கட்சி மணிப்பூரின் 2 தொகுதி களையும் (இன்னர், அவுட்டர்) கைப்  பற்றி அசத்தியது.

இந்நிலையில், மணிப்பூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. க்கள் செவ்வாயன்று பதவியேற்ற னர். மணிப்பூர் இன்னர் (உள்) தொகு தியில் வெற்றி பெற்ற அங்கொம்ச்சா  பிமோல், மணிப்பூர் அவுட்டர் (வெளி) தொகுதியில் வெற்றி பெற்ற ஆல்பிரட் ஆர்தர் இருவ ரும் அரசியல் சாசன புத்த கத்தை கையில் ஏந்தி தங்களது தாய்மொழியில் (மணிப்பூரி) எம்.பி.யாக பதவியேற்றனர்.

கைதட்டி ஆரவாரம்

மணிப்பூர் தொகுதி என்று அழைக்கப்பட்டவுடனேயே 2 எம்பிக்களுக்கும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் மேசையைத் தட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். சமாஜ்வாதி, காங்கி ரஸ் எம்.பி.க்கள்,”அரசியல் சாச னம் காப்பாற்றப்பட்டது போல, மணிப்பூரை பாதுகாப்போம்” என கோஷங்களை எழுப்பினர்.