states

img

மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

மணிப்பூரின் 19 காவல்நிலைய எல்லைகளை தவிர்த்து, மற்ற பகுதிகள் முழுவதும் பதற்றமான நிறைந்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே மாதம் முதல் குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கும், பழங்குடியினரல்லாத மெய்டெய் சமூகத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகின்றது. இந்த வன்முறையில், 170க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, ஜூலை மாதம் காணாமல் போன மெய்டெய் சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்கள், ஆயுதமேந்திய குழுவிடம் சிக்கியிருக்கும் புகைப்படமும், அவர்கள் காட்டில் இறந்துகிடக்கும் புகைப்படமும் இணையத்தில் பரவியது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை பெறுகி வருகிறது.
இதைத் தொடர்ந்து, மணிப்பூரின் 19 காவல்நிலைய எல்லைகளை தவிர்த்து, மற்ற பகுதிகள் முழுவதும் பதற்றமான நிறைந்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.