போபால் மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் முஸ்லிம், கிறிஸ்த வர்கள், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் சம்ப வங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. இத்த கைய தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா கும்ப லைச் சேர்ந்தவர்கள் என்பது நாடறிந்த விஷயம்
இந்நிலையில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தின் மணக்சவுக் பகுதியில் 3 முஸ்லிம் சிறுவர் களை, கோவில் ஒன்றின் படிக்கட்டு களில் அமர வைத்து “ஜெய் ஸ்ரீராம்” கூறச் சொல்லி 2 இந்துத் துவா குண்டர்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 6, 9 மற்றும் 11 வயதுடைய 3 முஸ்லிம் சிறுவர்களுக்கும் “ஜெய் ஸ்ரீராம்” வார்த்தையின் அர்த்தம் என்னவென்று தெரியாது. பள்ளிப்பாடம், விளையாட்டு, உணவு, உறக்கம் என்ற மழலை மனம் மாறாத சிறுவர்களை மத அரசியல் ஆதாயத்திற்காக “ஜெய் ஸ்ரீராம்” கூறச் சொல்லி செருப்பால் தாக்கியுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
ஒன்றரை மாதத்திற்கு முன்பு...
வீடியோவில் “ஜெய்ஸ்ரீராம்” கூறச் சொல்லி 3 சிறுவர்களையும் ஒருவர் செருப்பால் சரமாரியாக அடிக்கிறார். அதே நேரத்தில் மற்றொருவர் சம்பவத்தை வீடியோ மூலம் பதிவு செய்கிறார். வீடியோவை பதிவு செய்யும் நபர் ஆபாச வார்த்தைகளாலும், மத வெறி கருத்துகளுடனும் மிரட்டும் சத்தம் வீடியோவில் கேட்கிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி யுள்ளது. சமூகவலைத்தளங்க ளில் வீடியோ வைரல் ஆன பின்பே தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்க ளின் பெற்றோர்கள் மணக்சவுக் காவல்நிலையத்தில் புகார் அளித் துள்ளனர். இந்த புகாரையடுத்து இரண்டு நபர்கள் மீது தாக்கு தல், துஷ்பிரயோகம், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தாக மணக்சவுக் ஏஎஸ்பி ராகேஷ் கூறியுள்ளார்.