இம்பால், ஜன. 19 - மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மெய்டெய் பிரிவினரை பழங்குடி யினர் பட்டியலில் சேர்ப்பதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதி, மணிப்பூர் மாநி லத்தில் குக்கி மற்றும் மெய்டெய் இனக் குழுக்களுக்கு இடையே வன்முறையாக மாறியது. 2023 மே 3 முதல் மணிப்பூர் மாநி லம் பற்றி எரிந்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர்.
இடையில் 2 மாதம் வன் முறை ஓய்ந்திருந்தாலும், டிசம்பர் முதல் மீண்டும் வெடிக்கத் துவங்கியுள்ளது. ஆயு தமேந்திய நபர்களுக்கும், போலீசார் மற்றும் ராணுவத்துக்கும் இடையே மோதல் துவங்கியுள்ளது. குறிப்பாக மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியில் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தௌபால் மாவட்டத்தில் உள்ள மோரே நகரில் வியாழனன்று 2 காவலர் கள் உள்பட 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இம்பா லில் இருந்து சுமார் 42 கிமீ தொலைவில் உள்ள நிங்தௌகாங் கா-குனோவில், தியாம் சோமென் சிங் (50), நிங்தௌஜம் நபாடிப் மெய்தேய் (38), ஒய்னம் பமோல்ஜாவ் சிங் (63) மற்றும் அவரது மகன் ஒய்னம் மனிதோம்பா சிங் (32) ஆகிய 4 பேர் வியாழனன்று கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மோரே நகரில் ஏற்பட்ட வன்முறை யின் எதிரொலியாக நடந்த சண்டையில் இவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்க லாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலை யில், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோச கராக செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) முன்னாள் தலைமை இயக்குநர் குல்தீப் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.