states

அக்னிபாதை பயிற்சியில் இளம்பெண் தற்கொலை

இந்திய முப்படைகளில் இளைஞர்  களின் பங்களிப்பை அதிகரிப்ப தாக கூறி குறுகிய கால சேவை வாய்ப்பான அக்னி பாதை திட்டம் எதிர்க்  கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே  கடந்த 2022இல் ஒன்றிய மோடி அரசால்  அறிமுகம் செய்யப்பட்டது. அக்னி பாதை  திட்டத்தில் இணையும் இளைஞர்கள்  மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முடித்து  4 ஆண்டுகள் மட்டும் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் அவர்  கள் பணியில் இருந்து விடுவிக்கப்படு வார்கள். இந்த 4 ஆண்டு காலத்திற்கு  அவர்களுக்கு ஊதியம் மட்டும் வழங்  கப்படும். பிற ராணுவ வீரர்களுக்கு இருக்கும் பணப்பலன்கள் இவர்களுக்கு வழங்கப் பட மாட்டாது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது அபர்ணா என்ற இளம்பெண் அக்னி பாதை பயிற்சிக்காக மும்பையில் தங்கி இருந்தார். அங்குள்ள மல்வானி பகுதியில் உள்ள ஐஎன்எஸ் ஹாம்லா போர்க்கப்பலில் அவர் பயிற்சி மேற் கொண்டு வந்த நிலையில், திடீரென தனது அறையில் அபர்ணா தற்கொலை செய்து கொண்டார். அபர்ணா தற்  கொலை விவகாரம் பயிற்சி அழுத்தமா?  இல்லை வேறு எதுவும் காரணமா? இது குறித்து ராணுவம் எவ்வித விளக்கமும்  அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது