states

img

சரத் பவாரின் உடல்நிலை சீராக உள்ளது....  

மும்பை:
பித்தப்பை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரத்பவார் உடல்நிலை சீராகஉள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ளதனியார் மருத்துவமனையில் சரத் பவாருக்கு  கடந்தமார்ச் 30 ஆம் தேதி அவசரஎன்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா், அவருக்கு 15 நாள்களுக்குப் பிறகு பித்தப்பையை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வது என மருத்துவா்கள் தீா்மானித்தனா். அதன்படி, அவா் தனியார் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சரத் பவாருக்குபித்தப்பை அறுவைச் சிகிச்சை திங்களன்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தனது டுவிட்டர்பக்கத்தில் கூறியுள்ளதாவது:‘‘எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சைவெற்றிகரமாக நடத்தப்பட்டது. அவரது உடல்நிலைசீராக உள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்’’.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

;