மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கிரேன் இயந்திரம் விழுந்து 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.