states

img

மகாராஷ்டிராவில் துப்பாக்கிச்சூடு - பாஜக எம்.எல்.ஏ கைது

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியினருக்கும் (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அறைக்குள் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை போலீசார் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டார். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.