48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணியும்; பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியும் மக்க ளவைத் தேர்தலை எதிர்கொண் டன.
செவ்வாயன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் “இந் தியா” கூட்டணி 30 தொகுதிகளை (காங்கிரஸ் -13, சிவசேனா (உத் தவ்) -9, தேசியவாத காங்கிரஸ் (சரத்) - 8) கைப்பற்றி மாநிலத்தின் தனிப்பெரும் கூட்டணியாக உரு வெடுத்தது. பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வெறும் 17 (பாஜக - 9, சிவசேனா (ஷிண்டே) - 8, தேசிய வாத காங்கிரஸ் (அஜித்) - 1) தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி மண்ணை கவ்வியது.
மகாராஷ்டிராவில் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு பலத்த அடி கிடைத்துள்ள நிலையில், பாஜக கூட்டணி அரசின் மாநில நிர்வாகம் மீதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மீது பாஜக மேலிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள் ளது. குறிப்பாக, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளை உடைத் தும் 20 தொகுதிகளைக் கூட கைப் பற்ற முடியவில்லை என பாஜக மேலிடம் கேள்விக் கணைகளை தொடுத்துள்ளது. இதனால் மகா ராஷ்டிராவின் பாஜக ஆட்சியின் முதன்மைப் பொறுப்புகளில் உள்ள பாஜக தலைவர் தேவேந்திர பட்னா விஸ், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகிய 3 பேரும் பாஜக மேலிடத்தின் அதிருப்திக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளதாகவும், இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது எங்களுக்கு பதவி வேண்டாம் என கையை விரித்து உள்ளதாக வும் கூறப்படுகிறது.
தேவேந்திர பட்னாவிஸ் மகா ராஷ்டிரா துணை முதல்வர் பதவி யை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகா ராஷ்டிரா முதல்வராக உள்ள சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரும் தங்களது பதவியை ராஜி னாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகா ராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ள தாக மும்பை தகவல்கள் தெரி விக்கின்றன.