மகாராஷ்டிராவில் 30 சதவீதத்துக் கும் அதிகமாக மராத்தா சமூ கத்தினர் வாழுகின்றனர். கல்வி மற்றும் அரசு வேலை களுக்கு இடஒதுக் கீடு கோரி, மராத்தா சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே இரண்டு முறை உண் ணாவிரதப் போராட் டம் நடத்தினார். இட ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், உண்ணா விரதப் போராட்டத்தை கைவிட்டு டிசம்பர் 24-ஆம் தேதிக்குள் இடஒதுக்கீட்டை அறி விக்க வேண்டும் என மாநில அரசுக்கு புதிய கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் நான்டெட் நகருக்கு அருகே உள்ள மர் லாக் கிராமத்தில் வசிக்கும் தாஜிபா ராம் தாஸ் கடம் (23) என்ற இளைஞர் மராத்தா சமூக இடஒதுக்கீடு கோரி கடந்த நவம்பர் 11 அன்று விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி தீபாவளி தினத்தன்று (நவ.12) அதிகாலை உயிரிழந்தார். 2 நாட்க ளுக்கு பின்னரே இந்த விவகாரம் போலீ சார் மூலம் வெளியே கசிந்துள்ளது. மரா த்தா இடஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை விவகாரத்தால் மாநிலம் முழு வதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.