states

img

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தின்  கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்ஸில் மற்றும் அதைச் சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பலத்த மழை காரணமாக  சாலைகள் நீரில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக மீட்கப்பட்டுள்ளது. 
இதை தொடர்ந்து மீட்பு பணிக்காக இரண்டு கடற்படை மீட்புக் குழுக்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கும், ஐந்து குழுக்கள் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லூனுக்கும் சென்றுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 32 உடல்கள் ஒரு இடத்திலிருந்தும், நான்கு உடல்கள் மற்ற இடங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன. 30 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் மாயமாகி உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத் மையம் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;