states

img

மும்பை: 61 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - ஒருவர் பலி

மும்பையில் 61 அடுக்கு மாடிகளை கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கர்ரே சாலையில் உள்ள ஒன் அவிக்னா பூங்கா கட்டிடத்தில் உள்ள 19வது மாடியில் இன்று  11.55 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கடும் புகைமூட்டம் எழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அடுக்கு மாடி கட்டத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.  
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

;