states

img

மராட்டியம்: 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி  

மராட்டியத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் அஜித் பவார், மும்பையிலும், புனேயிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்தார். அதனைதொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சட்டமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக்  கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.