states

img

ஊதிய உயர்வு கோரி கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்....

பெங்களுரு:
ஊதிய உயர்வு வழங்கக்கோரிகர்நாடக மாநில சாலை போக்கு வரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முழு அளவு பேருந்து சேவையைக் கர்நாடக மாநில சாலை போக்கு வரத்துக் கழகம் நடத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாதலைமையிலான பாஜக அரசு உள்ளது.  இந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வெகு நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.  நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது.இதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக போக்கு வரத்து ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். ஏப்ரல் 7  முதல் போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைக் கர்நாடகா மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளனர்.இதனால் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பேருந்து போக்குவரத்து அடியோடு நின்று போனது.  பெங்களூருநகரில் மிகவும் பரபரப்பான மெஜஸ்டிக் சர்க்கிள் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.   தனியார் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம்தற்காலிக அனுமதி வழங்கி யுள்ளது.

;