பெங்களூரு, ஜூன் 2 - “நாட்டு மக்களுக்கு பயத்தை ஏற்படு த்தும் ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்புதான்..” என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, பாஜக-வினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். “மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை வல்லபாய் படேல் தடை செய்திருந்தார் என்பதை பாஜக-வினர் மறந்துவிடக் கூடாது” என்று சித்தராமையா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியர்களின் இனத் தூய்மை குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மரபணு வர லாற்றை நிறுவவும், இந்தியாவில் உள்ள இனங்களின் தூய்மையை கண்டறியவும் ஒன்றிய கலாச்சார அமைச்சகமானது, டிஎன்ஏ விவரக்குறிப்பு கருவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை துவங்கியிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஜெர்ம னியின் சர்வாதிகாரி ஹிட்லர் முன்வைத்த இனத்தூய்மை என்ற பாசிஸ்ட் அர சியல் கட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வந்திருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதலமைச்ச ரும், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவரு மான சித்தராமையா, ஜவஹர்லால் நேருவின் நினைவு தின நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசும்போது, “முதலில் ஆர்எஸ்எஸ்-காரர்கள் பூர்வீக இந்தி யர்களா... ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா...?” என்ற கேள்விக்கு பதில் வேண்டும்” என்று பாஜக-வினரை சாடினார். மேலும், “ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்றால், அவர்கள் என்ன திராவிடர்களா?” என்றும் கேட்டிருந்தார். ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பே அடிப்படையில் இந்தியர்களின் அமைப்பு அல்ல! என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, “முதலில் சித்தராமையா ஆரியரா? அல்லது திரா விடரா? என்பதை அறிவிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். அதற்கு, “ஆர் எஸ்எஸ் அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூ கத்தினர் மட்டுமே முக்கியப் பதவியில் இருப்பது ஏன்? இந்துக்களாக இருந்தா லும் கூட தலித் மக்கள், பிற்படுத்தப் பட்டோருக்கு ஆர்எஸ்எஸ்-ஸில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? இந்த சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத அளவிற்கு 97 ஆண்டு வரலாறு கொண்ட ஆர்எஸ்எஸ் ஒரு அவ்வளவு பலவீன மான அமைப்பா?’’ என்று சித்தராமையா மீண்டும் சாட்டையைச் சுழற்றினார். இதற்கு நேரடியாக பதிலளிக்காத, கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் சதா னந்த கவுடா, “ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து சித்தராமையா பயப்படுகிறார். அதனால்தான் தேவையில்லாத கருத்து களை கூறி வருகிறார்’’ என்று மழுப்பி யிருந்தார்.
ஆனால், சதானந்த கவுடா-வையும் சித்தராமையா விடுவதாக இல்லை. டுவிட்டர் பக்கத்தில், ஆர்எஸ்எஸ், பாஜக குறித்து மீண்டும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். “ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பார்த்து நான் பயப்படுவதாக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஏனெ ன்றால், மதச்சார்பின்மை, அகிம்சை, நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியனும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து பயப்படுகின்றனர். பயத்தை ஏற்படுத்துவோரை பொதுவாக பயங்கரவாதிகள் என கூறுவோம். அந்த வகையில் பார்த்தால், தற்போது ஆர்எஸ்எஸ்-ஸை பார்த்து நான் பயப்படுவதாக சதானந்த கவுடா கூறி யதற்கான அர்த்தத்தை அவரிடம் தான் கேட்டறிய வேண்டும். மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார் என்பதை பாஜகவினர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களாக தலித்துக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் களும்தான் உள்ளனர். ஆனால், இவர் களை அந்நியப்படுத்தும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருப்பதால், அதனைக் கண்டு நிச்சயமாக நான் பயப்படு கிறேன். சீர்த்திருத்தம் என்ற பெயரில் சமூகநீதியை நிலைநாட்டும் இட ஒதுக்கீடு, அதுதொடர்பான சட்டங்களை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்-ஸை பார்த்து அச்சப்படாமல், அதன் மீது அன்பா செலுத்த முடியும்?. தங்களின் குழந்தைகளை எல்லாம் வெளிநாட்டிற்கு அனுப்பி கல்வி கொடுத்துவிட்டு, இந்தியாவிலிருக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்க ளின் குழந்தைகளை பிரச்சனைகளில் இறக்கிவிட்டு சிறைக்கும் அனுப்பும் செயலை சர்வசாதாரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்துகொண்டிருக்கிறது. ஒரு அமைப்பின் சித்தாந்தம் என்பது பிறரிடம் மரியாதையை பெறும் வகையில் இருக்க வேண்டும். மாறாக அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது. இவ்வாறு சித்தராமையா, ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாஜக-வினரையும் விளாசியெடுத்துள்ளார்.