ரயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் தோற்று கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாள் தோறும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முகக்கவசம் இருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது