நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவி யேற்றார்.
கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளரான ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கிடையில், வெங்கையா நாயுடுவின் குடியரசு துணை தலைவர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நாட்டின் 14-வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். ஜெகதீப் தன்கருக்கு குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.