states

img

கொரோனா தடுப்பூசி போட்ட 447 பேருக்கு உடல் நல பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2.2 லட்சம் முன் களப்பணியாளர்களில் 447 பேருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி  தொடங்கி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்  நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில் தமிழகம் ஆந்திரம் கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 224301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்நிலையில் 447 பேருக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 
காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்றவைதான் ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

;