states

img

இந்தியாவில் ஒரே நாளில் 40134 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 40,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,134 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது. 
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,773 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,946 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,13,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.31 சதவீதமாக  உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 47,22,23,639 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

;