தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் குடியிருப்புகளில், குழாய்களில் வரும் தண்ணீரில் புழுக்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் குடியிருப்புகளில், குழாய்களில் வரும் தண்ணீரில், புழுக்கள், கொசு முட்டைகள், பூச்சிகள் இருப்பதாக மருத்துவர்கள், மருத்துவமனை இயக்குநருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னதாக இது குறித்து, பல முறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.