புதுச்சேரி,மார்ச் 15- 112வது சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி புதுச்சேரியில் ஊர்வலம் மற்றும் கோரிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. சாரம் ஜிவானந்தம் சிலை அருகிலிருந்து நடந்த கருத்தரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் டி.ஜி.முனியம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் உரையாற்றினார். சிஐடியு புதுச்சேரி பொதுச் செயலாளர் சீனுவாசன், லிகாய் நிர்வாகி அன்பரசி ஜூலியட், சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.இளவரசி மற்றும் பல்வேறு சங்கங்த் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காமராஜர் சிலை எதிரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த கருத்தரங்கில் புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வேண்டும். ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறவேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.