states

புதுவை மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள்

புதுச்சேரி, ஜன. 16- மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் ஆகியவை வழங்கப் படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதுவை முத்திரையர் பாளை யத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலு கூட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி  பேசுகையில், உதவித் தொகை புதுவையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத் தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். இம்மாதம் முதல் புதி தாக 16 ஆயிரத்து 769 பேர் உதவித்தொகை பெற உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கும் திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும். எந்த  உதவியும் பெறாத குடும்ப தலை விகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங் கும் திட்டமும் விரைவில் தொடங்க ப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை மாநிலம் கல்வி, சுகா தாரத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட்டு பல துறைகளில் முதலிடத்தை பெற வேண்டும் என்றும் அவர் பேசினார்.