புதுச்சேரியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா அளிப்பு கூட்டத்தில் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த முறைசாரா தொழிலாளி தோழர் ஜெகதீசன் தனது ஒரு நாள் ஊதியம் ரூ.800 யை தீக்கதிர் வளர்ச்சி நிதியாக கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர்ராமலிங்கத்திடம் வழங்கினார். தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் நான்கு மாட வீதிகள் மற்றும் வில்லியனுர் இணைப்பு சாலைகளை சரி செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா எதிர்கட்சி தலைவர் இரா.சிவா முன்னிலையில் நடைபெற்றது.