புதுச்சேரி, ஜன. 8- கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் புதுவையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரிய வணிக நிறுவனங்களில் காற்றோட்ட வசதியுடன் 50 விழுக்காடு நபர்களுடன் அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநில பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஒட்டல்கள், உணவகங்கள், கலையரங்க ங்கள், முடித்திருத்தகங்கள், அழகு நிலை யங்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள், திரையங்குகள் ஆகியவற்றில் 50 விழுக்காடு நபர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். உணவகங்களில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 4 பேர் அமர்ந்து உணவு அருந்தும் மேசை களில் 2 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இந்த நடவடி க்கை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவி த்துள்ளது.