states

img

மின் விபத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிதிஉதவி

புதுச்சேரி, பிப். 23- பணியின் போது விபத்தில் பாதிக்கப்பட்ட மின்துறை ஊழியர்க ளின் மருத்துவ செலவுக்கு போராட்டக் குழு சார்பில் நிதி வழங்கப்பட்டது. புதுச்சேரி தொண்டமாநத்தம் துணை மின்நிலையத்தில் மின் பரா மரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிவக்குமார், சிவனேஸ்வரன் ஆகியோர் எதிர்பாராத விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர். இதில் ஊழியர் சிவக்குமார் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   நிவாரணம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஊழியர்கள், பொறியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து ரூ. 1.5 லட்சத்தை மின் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு தலைவர்கள் அருள்மோழி, வேல்முருகன், செந்தில்குமார், அச்சுதானந்தன், ராமசாமி, ராஜேந்திரன், தணிகாசலம், உத்தராடம், ரவிச்சந்திரன் ஆகியோர் சிவனேஸ்வரனிடம் வழங்கினர். அதேபோல் ஏற்கனவே சிவக்குமார் மருத்துவ செலவிற்கு ரூ.7.2 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய 4 பகுதிகளில் வசூலான மொத்த தொகையில் இருந்து இந்த வழங்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது.