புதுச்சேரி, மார்ச் 22 சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி முத்தி யால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர், கசாப்புக் காரன் தோப்பு, அங்காளம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும், சாலை நகரில் இயங்கி வந்த மினி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், ஐ மாஸ் விளக்கு களை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சி யப்பன், கலியமூர்த்தி, சத்யா, பிரதேச குழு உறுப்பினர் சரவணன், முத்தி யால்பேட்டை கிளைச் செயலாளர் பாரி உள்ளிட்ட திரளான பெண்கள் காலிக் குடங்களை தலையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.