பீகாரைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல் வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி யின் மையக்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட்,”நாட்டில் பல்வேறு சாதி கள், மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக் கின்றனர். பல்வேறு சாதியினர் பலவகை யான தொழில்களைச் செய்கின்றனர். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு ஏற்றபடி திட் டங்களை வகுக்க முடியும். சாதிவாரியாக திட்டங்களை வகுப்பது எளிதாக இருக் கும். அதனால் பீகாரில் நடத்தப்பட்டது போல ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்” எனக் கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர் தல் நடத்தப்பட உள்ள நிலையில், அம் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு பாஜகவிற்கு கடும் கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.