பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள திகா காட் என்ற இடத்தில் மீன்வளத்திற் காக1.5 லட்சம் மீன் குஞ்சுகளை கங்கை நதியில் விடும் நிகழ்வை ஒரு பெரிய நிகழ்ச்சியாக கால் நடை மற்றும் மீன்வளத் துறை ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்ச்சியில் பாட்னா பகுதி மாஜிஸ்திரேட் வி.பி.குப்தா பாது காப்பு பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிளை தண்ணீர் கொண்டு வர சொல்லியுள்ளார். இதற்கு பெண் கான்ஸ்டபிள், “நாங்கள் அரசாங்கத்தின் ஊழி யர்கள். உங்களுக்கு (மாஜிஸ்தி ரேட்) பணிவிடை செய்ய தனிப் பட்ட வேலையாட்களாக எங் களை பணியமரத்தவில்லை” எனக் கூறி மறுப்பு தெரிவித்து மாஜிஸ்திரேட்டிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண் கான்ஸ்டபிளின் இந்த அதி ரடியான வாக்குவாதத்தால் மாஜிஸ்திரேட் வி.பி.குப்தா வேறு எதுவும் கூறாமல் அமைதியா கவே இருந்த நிலையில், காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளரிடம் (டிஎஸ்பி) புகார் அளிக்க உள்ளதாக பெண் கான்ஸ்டபிள் சம்பவ இடத்தி லேயே கூறி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காகி வைரலாகி வரும் நிலையில், பெண் கான்ஸ்டபி ளுக்கு பாராட்டு குவிந்து வரு கிறது.