பாட்னா, ஜூலை 27- பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், தலைமை செய்தி தொடர்பாளருமான வினோத் சர்மா மணிப்பூர் விவ காரத்தில், ‘பிரதமர் மோடிக்கு மனிதாபிமானம் இல்லை’ எனக் கூறி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் கனத்த இதயத்துடன் பாஜக வில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். காரணம் மணிப்பூர் சூழ்நிலை இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. 80 நாட்களாகியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தேசத்தை நேசிப்பதாகவும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும், “சனா தன” கலாச்சாரத்தைக் காப்பதாகவும் பாசாங்கு செய்யும் பாஜகவில் பணிபுரிவதன் மூலம் நான் களங்கம் அடைந்துள்ளேன். பிரதமர் மோடிக்கு மனிதாபிமானம் கொஞ்சமாவது இருந்திருந்தால், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்திருப்பார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே எனது ராஜி னாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.