states

img

பீகாரில் மேலும் ஒரு ஏஐஎம்ஐஎம் தலைவர் சுட்டுக்கொலை

பாஜக கூட்டணி ஆளும்  பீகாரின் கோபால்  கஞ்ச் மாவட்டத் தில் மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம் -  அசாதுதீன் ஓவைசி கட்சி) தலைவரான அப்துல் சலாம்  அடையாளம் தெரியாத மர்ம  நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார். தனது இருசக்கர வாக னத்தில் ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டு இருந்த அப்  துல் சலாமை, 4 பேர் கொண்ட  கும்பல் பல கி.மீ. தூரம் விரட்  டிச் சென்று சுட்டுக் கொன்றுள்  ளது. உயிரிழந்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அப்துல் சலாம் கடந்த 2022 சட்டமன்ற தேர்த லில் கோபால்கஞ்ச் தொகுதி யில் களமிறங்கி 3-ஆம் இடம் பிடித்தார். தேர்தல் விரோதம் காரணமாக அப்துல் சலாம் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப் படுகிறது. 

‘நாற்காலிப் போட்டியை குறைத்து வேலை செய்யுங்கள் நிதிஷ் குமார்’

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பீகாரின் சிவான் மாவட்  டத்தில் ஆரிப் ஜமால் என்ற  ஏஐஎம்ஐஎம் மண்டல தலை வர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடுத்த 2 மாத காலத்தில்  மேலும் ஒரு மாவட்டத் தலை வர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாது தீன் ஓவைசி கண்டனம் தெரி வித்து,  அம்மாநில முதல்வரை  கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகை யில், “நிதிஷ் குமார் அவர்  களே, நாற்காலியை காப் பாற்றி விட்டீர்கள், கொஞ்சம் மாநில மக்களுக்கு வேலை  செய்யுங்கள். ஏன் ஏஐஎம்ஐஎம் தலைவர்களுக்கு குறிவைத்து கொலை சம்பவங்கள் அரங் கேறுகின்றன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.