states

img

ஹைதராபாத்: விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலி

ஹைதராபாத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் தொட்டிக்குள் சென்ற போது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்கச் சென்றவரும் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;