states

img

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து  

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தின் ஷியாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மந்திரபேட்டா கிராமம் அருகே தொழிலாளர்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லாரி ஒன்று ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மஞ்சுளா (48), விமலா (50), ரேணுகா (48) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானர். ஒருவர் எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காயமடைந்த 14 பேரில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அதனைதொடர்ந்து உள்ளூர் எம்எல்ஏ ஜி.வெங்கட்ரமணா ரெட்டி, மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.75 ஆயிரமும், தனிப்பட்ட முறையில் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.