states

img

ஆட்டோ மீது லாரி மோதல்.... தெலங்கானாவில் 6 பேர் பலி... 

ஹைதராபாத் 
தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத் மாவட்டம் எர்ரகுந்தாவைச்  மண்டலத்தை சேர்ந்த 5 பேர்கள் ( ஒரே குடும்பத்தைச் சேர்ந்த)   வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக வாரங்கலுக்கு ஆட்டோவில் சென்றனர்.  

மாரிமிட்டா பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த  லாரி ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது.  இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் பலியானர்கள். இதில் மூன்று பெண்களும் அடங்கும்.  விபத்து தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

எர்ரகுந்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானதால் அப்பகுதியில் சோகம் மூண்டுள்ளது.  

;