தெலுங்கானாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தில் நேற்று பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தின் கூரையின் கீழ் நின்றுக் கொண்டிருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு குடியிருந்தவர் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. .
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.