states

img

ஏகலைவனின் விரலை வெட்டிய துரோணர் போல தேசத்தின் விரல்களை வெட்டுகிறீர்கள்! - ராகுல்காந்தி

நமது அரசியலமைப்பு உலகின் மிக நீள மான எழுதப்பட்ட அரசியலமைப்பு என்று  சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அரசிய லமைப்பு நமது நாட்டின் ஆழமான தத்துவ கருத்துக்களை கொண்டுள்ளது.  அரசியலமைப்பில் அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்டோரின் கருத்துக்கள் பிரதி பலிக்கின்றன. ஆனால் இந்தக் கருத்துக்கள் எங்கிருந்து வந்தன? அவை குரு நானக், பச வண்ணர், புத்தர், மகாவீரர், கபீர் போன்ற மகான்  களின் போதனைகளில் இருந்து வந்தவை.  எனவே இது வெறும் நவீன இந்தியாவின் ஆவணம் மட்டுமல்ல. பண்டைய இந்தியாவின் கருத்துக்களும் மதிப்புகளும் இல்லாமல் இதை  உருவாக்கியிருக்க முடியாது. 

சாவர்க்கர் சொன்னது என்ன? 

இப்போது நான் ஆர்எஸ்எஸ்சின் தலைவர்  சாவர்க்கரின் கருத்துக்களை மேற்கோள் காட்ட  விரும்புகிறேன். அவர் அரசியலமைப்பு பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்:  “இந்திய அரசியலமைப்பில் மிக மோசமான  விஷயம் என்னவென்றால் அதில் இந்தியத்  தனமே இல்லை. வேதங்களுக்கு அடுத்தபடியாக  மனுஸ்மிருதிதான் நமது இந்து தேசத்திற்கு மிக வும் வணக்கத்திற்குரியது. பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை  மற்றும் நடைமுறைகளுக்கு இந்த நூல்தான் அடிப்படை. இன்றும் மனுஸ்மிருதிதான் சட்டம்.” சாவர்க்கர் தெளிவாக கூறுகிறார் - நமது அரசியலமைப்பில் இந்தியத்தனமே இல்லை என்கிறார். இந்தியாவை ஆள்வதற்கு மனுஸ்மிருதிதான் சரியான நூல் என்கிறார்.  இதுதான் இன்றைய போராட்டம். இவர்கள் (பாஜக) அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால் இவர்களின் தலைவர் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக்  கொள்கிறார்களா? இவர்கள் நாடாளுமன்றத் தில் அரசியலமைப்பைப் ‘பாதுகாப்பதாக’ பேசும்போது, அதற்கு எதிரான தக்ள் தலைவர்  சாவர்க்கரை கேலி செய்கிறார்கள், அவமதிக்கி றார்கள் என்று தான் பொருள்.  இன்றைய இந்தியாவில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசி யலமைப்பின் கருத்துக்களை பாதுகாப்பவர்கள் இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நமக்கு ஒரு தலைவர் இருக்கிறார்: - தமிழ்நாட்டில் பெரியார்

- கர்நாடகாவில் பசவண்ணர் 

- மகாராஷ்டிராவில் புலே மற்றும் அம்பேத்கர் - குஜராத்தில் மகாத்மா காந்தி இன்றைய ஆட்சியாளர்கள் (பாஜக) இந்த  மகான்களைப் புகழ்கிறார்கள். ஆனால் தயக்  கத்துடன் புகழ்கிறார்கள், ஏனெனில் அவர் களுக்கு வேறு வழியில்லை. ஆனால் உண்மை  என்னவென்றால், இந்தியா பழைய முறைப்படி ஆளப்பட வேண்டும் என்றே இவர்கள் விரும்பு கிறார்கள்.” 

ஏகலைவனின் கதை

நான் சிறுவனாக இருந்தபோது, தில்லியைச்  சுற்றி காடுகள் இருந்தன. எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அருகிலேயே காடு தொடங்கிவிடும். அதே போன்ற ஒரு காட்டில் ஆறு-ஏழு வயது சிறு வன் ஒருவன் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தவம் செய்தான்.  தினமும் வில்வித்தை பயிற்சி செய்தான். பல  ஆண்டுகள் கடின உழைப்பு. அருகில் வசிப்ப வர்கள் இந்த சிறுவனைப் பற்றி அறிந்தனர். அவன் பெயர் ஏகலைவன்.  துரோணாச்சாரியாரிடம் சென்று கற்றுக் கொள்ள விரும்பினான். ஆனால் அவர் ‘நீ உயர்  சாதியினன் அல்ல, எனவே நான் உனக்கு குரு  ஆக முடியாது’ என்றார்.  ஏகலைவன் மீண்டும் தவம் தொடர்ந்தான். துரோணரின் மண் சிலையை வைத்து பயிற்சி செய்தான். சில ஆண்டுகளில் மிகச் சிறந்த வில்  வீரன் ஆனான்.  துரோணர் தன் மாணவர்களுடன் வந்த போது, ஏகலைவனின் திறமையை கண்டு வியந்தார். ஆனால் குரு தட்சணையாக அவனது கட்டை விரலைக் கேட்டார். ஏகலை வன் தன் விரலை வெட்டிக் கொடுத்தான். 

எல்லோரின் விரலையும் வெட்டுகிறீர்கள்

துரோணாச்சாரியார் ஏகலைவனின் விரலை  வெட்டியது போல, நீங்கள் நாட்டின் விரல்களை  வெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.  -     தாராவியை அதானிக்கு கொடுக்கும்போது, அங்குள்ள சிறு தொழில் முனைவோரின் விரல்களை வெட்டுகிறீர்கள். -     துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை என அனைத்தையும் அதானிக்கு கொடுக்கும்போது, நேர்மை யான வணிகர்களின் விரல்களை வெட்டு கிறீர்கள். -    பக்கவாட்டு நுழைவு மூலம் அரசியல மைப்பை மீறும்போது இளைஞர்கள், பிற் படுத்தப்பட்டோர், ஏழைகளின் விரல்களை வெட்டுகிறீர்கள். ஏகலைவன் போல, இந்திய இளைஞர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து பல்வேறு தேர்வு களுக்கு படிக்கிறார்கள். முன்பெல்லாம் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஓடிப் பயிற்சி செய்வார்கள். அக்னிபாத்  திட்டத்தை கொண்டு வந்து அந்த இளைஞர் களின் விரல்களை வெட்டிவிட்டீர்கள்.  70 முறை தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் விரல்களை வெட்டுகிறீர்கள்.  இன்று தில்லிக்கு வெளியே விவசாயிகள் மீது கண்ணீர் புகை பிரயோகம், தடியடி நடத்து கிறீர்கள். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்கிறார்கள், நியாயமான விலை கேட்கி றார்கள். ஆனால் நீங்கள் அதானிக்கும் அம்பா னிக்கும் லாபம் சேர்க்கிறீர்கள். விவசாயிகளின் விரல்களை வெட்டுகிறீர்கள்.

உ.பி.யில் நடப்பது  சட்டத்தின் ஆட்சியா?

சில நாட்களுக்கு முன் நான் ஹாத்ரஸ் சென்றேன். அங்கு 4 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். நான் இரண்டு நாட்களுக்கு முன்  அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்தேன்.  குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக திரி கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின்  குடும்பத்தினர் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ள னர். அவர்களால் வெளியே செல்ல முடிய வில்லை. குற்றவாளிகள் தினமும் மிரட்டு கிறார்கள்.  குடும்பத்தினர் என்னிடம் கூறினர் - மகளின்  இறுதி சடங்கு கூட செய்ய அனுமதிக்கவில்லை என்று உ.பி. முதலமைச்சர் இது குறித்து ஊட கங்களில் பொய் பேசினார்.  இது அரசியலமைப்பில் எங்கே எழுதப் பட்டுள்ளது? பாலியல் வன்கொடுமை செய்த வர்கள் வெளியே திரிய வேண்டும், பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பம் வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும் என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? இது உங்கள் நூலில் (மனுஸ்மிருதி) எழுதப்  பட்டுள்ளது. அரசியலமைப்பில் அல்ல. உத்த ரப்பிரதேசத்தில் உங்கள் ஆட்சி. அங்கு அரசிய லமைப்பு செயல்படவில்லை, மனுஸ்மிருதி தான்  நடைமுறையில் உள்ளது.  அந்தக் குடும்பம் என்னிடம் கூறியது - உத்த ரப்பிரதேச அரசு அவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி  குடியமர்த்துவதாக கூறினர். நான்கு ஆண்டு கள் ஆகியும் இன்னும் மாற்றி குடியமர்த்த வில்லை.  நான் இந்த அவையில் உறுதியளிக்கிறேன் - அம்பேத்கரின் அரசியலமைப்பை நம்பும் மக்கள்,  இந்தியா கூட்டணியினர் ஆகிய நாம் அனை வரும் சேர்ந்து அந்தக் குடும்பத்தை மறுவாழ்வு அளித்து காப்போம்.  இந்தியாவின் ஒவ்வொரு ஏழை மனிதனிட மும் நான் சொல்ல விரும்புவது - உங்களை அரசி யலமைப்பு பாதுகாக்கிறது. பாஜக 24 மணி நேர மும் அரசியலமைப்பை தாக்குகிறது.  அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது - மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகிய வற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று.  சம்பல் பகுதியிலிருந்து சில இளைஞர்கள் என்னை சந்திக்க வந்தனர். அப்பாவி மக்கள். எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்களில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றார்கள். இது அரசியலமைப்பில் எங்கே எழுதப்பட்டுள்ளது?”   அம்பேத்கரின் எச்சரிக்கை “அம்பேத்கர் சொன்னார் - அரசியல் சமத்து வம் இருந்தாலும், சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லையென்றால், அரசியல் சமத்து வமும் அழிந்துவிடும் என்று.  இன்று அது அனைவரின் கண்முன் நிகழ்கிறது. அரசியல் சமத்துவம் அழிக்கப் பட்டுவிட்டது. இந்தியாவின் அனைத்து நிறு வனங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டன. சமூக சமத்துவம் இல்லை. பொருளாதார சமத்துவம் இல்லை.  எங்களின் அடுத்த நடவடிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு. நாட்டில் யார் யாருடைய விரல்களை வெட்டியுள்ளீர்கள் என்பதை நாட்டுக்கு காட்ட விரும்புகிறோம்.  தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகி யோரின் விரல்களை எவ்வாறு வெட்டியுள்ளீர் கள் என்பதை காட்ட விரும்புகிறோம்.