states

img

தில்லியில் பாஜக விளம்பர பதாகையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்

தில்லியில் பாஜக நடத்தும் குடிசை பெருமித பேரணிக்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் தமிழ் எழுத்தாளரும், பேராசிரியருமான பெருமாள் முருகனின் படமும் இடம்பெற்றுள்ளது. 
டெல்லியில் வருகிற 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. பாஜக குடிசை பகுதியில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள குடிசை பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில்தான், டெல்லியில் பாஜக நடத்தும் “குடிசை பெருமித பேரணி” விளம்பரப் பேனரில், பேராசிரியரும் தமிழின் முக்கிய எழுத்தாளருமான பெருமாள் முருகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. டெல்லியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாஜகவின் பேனரில் தனது புகைப்படத்தைக் கண்ட பெருமாள் முருகன், குடிசை வாசிகளில் ஒருவனாக இருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

;