states

img

பொய் சொல்லி மாட்டிக் கொள்ளும் பாஜக-வினர், ‘மன்னிப்பு’ கேட்பார்களா?

காங்கிரஸ் விளாசல்

புதுதில்லி, டிச. 27 - வெளிநாடு செல்வதற்காகவே, ராகுல் காந்தி நடைபயணத்தை நிறுத்தியிருப்பதாக பாஜக முன்வைத்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மாட்டிக் கொள்ளும் பாஜக-வினர் மன்னிப்பு கேட்பார் களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மன்னிப்பு கேட்பது அவர்களின் பழைய வழக்கம் தான் என்றும் வி.டி.சாவர்க்கரை மறைமுகமாக குறிப்பிட்டும் காங்கிரஸ் சாடியுள்ளது. ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அண் மையில் அளித்த பேட்டியில், “விடுமுறைக்காக யாத்திரையை இடைநிறுத்துபவர்கள் மற்றும் ஒருநாள் கூட கூட்டத்தொடரில் கலந்து கொள்ளா தவர்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைப் பற்றி பேசுவது விசித்திரமாக இருக்கிறது” என்று  ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சனம் செய்து இருந்தார்.  

இதற்குத்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்னரிடே ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரசின் நடைபயணம் பற்றி பொய் பரப்புவதிலும், களங்கப்படுத்துவதிலும் பாஜக  தீவிரமாக இருக்கிறது. பாஜக தலைவர்களும், அதன் தகவல் தொழில்நுட்ப பிரிவும் பொய்களை பரப்பும் நிலையில், சில செய்திச் சேனல்கள் இந்த பொய்களை ஊக்குவிக்கிறார்கள். நடைபயணம் குறித்து பாஜக 9 பொய்களை பரப்பி யது. அனைத்து பொய்களும் அம்பலப்படுத்தப் பட்டு விட்டன. ராகுல் காந்தி கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வெளிநாடு செல்வார் என்று பாஜக தலைவர் ஒருவர் (பிரகலாத் ஜோஷி) கூறியிருந்தார். ஆனால் கடும் குளிரில் போர்வை போர்த்திக் கொண்டு அமைச்சரும் (பிரகலாத் ஜோஷி), பாஜக தலைவரும் (பிரதமர் மோடி) நாட்டைப் பிரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, மகாத்மா  காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, சவுத்ரி சரண் சிங் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தி னார். எனவே, பாஜகவினர் மீண்டும் (ராகுல் காந்தி  வெளிநாடு செல்வதற்காக யாத்திரையை நிறுத்தி யதாக) பொய் சொல்லி பிடிபட்டுள்ளனர். மன்னி ப்பு கேட்குமா மஃபீயர்களின் ராணுவம்? மன்னிப்பு கேட்பது அவர்களின் பழைய பழக்கம்.”  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.