states

பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

புதுதில்லி,அக்.28- பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், , பெகாசஸ் விவ காரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி,  விவாதம் நடத்துமாறு வலியுறுத்தப் போகிறோம். ஆனால், ஒன்றிய அரசு ஒருபோதும் விவாதம் நடத்த  தயாராக இருக்காது.  முதலமைச்சர் கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட வர்களுக்கு எதிராக பெகாசஸ்  மென்பொருள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும், ஒட்டுகேட்பு தகவல்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் வைத்திருக்கிறார்களா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

;