states

செர்பியாவில் தடுப்பூசி ஆலை

பெல்கிரேடு, ஏப்.23- சீனாவின் உதவியோடு செர்பியாவில் தடுப்பூசி ஆலை ஒன்று அமைக்கப்பட்டு வரு கிறது. இரண்டு நாடுகளும் இணைந்து அமைக்கும் இந்த தடுப்பூசி ஆலைக்கான அடிக் கல், செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சால் நாட்டப்பட்டது. கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் திணறி வருகின்றன. தடுப்பூசி கள் கிடைப்பதிலும் அசமத்து வம் நிலவுகிறது. செர்பியாவும் தடுப்பூசி கிடைக்காமல் நெருக் கடியால் தடுமாறியது. சீனாவு டன் போடப்பட்டுள்ள புதிய உடன்பாட்டின்படி, தடுப்பூசி ஆலை அமைப்பதில் முழுமை யான பங்கை சீனா ஆற்றும். தடுப்பூசி உற்பத்தி உடனடி யாகத் தொடங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 3 கோடி தடுப்பூசிகள் இந்த ஆலையில் உற்பத்தி யாகும். சினோபார்ம் என்ற மருந் தைத் தயாரிக்கப் போகிறார் கள். ஏற்கனவே இந்த மருந்து செர்பிய மக்களுக்கு செலுத்தப் பட்டுள்ளது. இந்த மருத்து செர்பியாவுக்கு மட்டுமல்லா மல், மற்ற ஐரோப்பிய நாடுக ளுக்கும் கிடைக்கப் போகிறது. தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்த சில ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து மீள இந்தப் புதிய தொழிற்சாலை உதவி செய்யப் போகிறது.