states

தமிழகத்திற்கான நிலுவை நிதியை விரைந்து வழங்க ஒன்றிய நிதியமைச்சரிடம் வலியுறுத்தல்

புதுதில்லி,பிப்.25-  தமிழகத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை ஒன்றிய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழக நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன்,ஒன்றிய நிதியமைச்ச ரிடம் வலியுறுத்தியுள்ளார். தில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிப்ரவரி 25 வெள்ளியன்று சந்தித்தார்.  அப்போது, மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்பட்டால் அந்த தொகைகளை தமிழக அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் சேர்க்க முடியும்.  இந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்படவில்லையானால், அந்த தொகை களை அடுத்த பட்ஜெட்டில் தான் கணக்கில் சேர்க்க முடியும் என்று பழனிவேல் தியாகராஜன், அமைச்சரிடம் தெரிவித்தார்.  உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் தமிழகத்துக்கான நிதிகள் நிலுவையில் உள்ளன. நிதித்துறை செயலாளர் சோமநாதன் உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்த தமிழக நிதி அமைச்சர், தமிழகத்துக்கான திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நிலுவை யில் உள்ள நிதிகளை ஒன்றிய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் தமிழக நிதி அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.