states

img

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய சிஐடியு

புதுதில்லி, மே 11 - இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீராங் கனைகள் பாலியல் தொல்லை புகார்  அளித்தனர். இதை ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் மல்யுத்த  வீராங்கனைகள் அடுத்த சில நாட்களில் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்ட த்தில் குதித்தனர். இதனால் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் மேரி கோம் தலைமையில் விசார ணை ஆணையம் அமைத்தது. மேரி கோம் அறிக்கை தாக்கல் செய்ததால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் படும் என போராட்டத்தை மல்யுத்த  வீரர் - வீராங்கனைகள் கைவிட்டனர். ஆனால் பிரிஜ் பூஷன் மீது சாதாரண விசாரணை கூட நடத்தப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த  மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மீண்டும் ஏப்ரல் கடைசி வாரத்திலி ருந்து தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பிரிஜ் பூஷன் மீது எப்ஐஆர் பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் குழு கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுப்ப தாக அறிவித்த சில மணிநேரங்களில் தில்லி காவல் துறையினர் பிரிஜ்  பூஷன் மீது 2 பிரிவுகளில் (ஒன்று  போக்சோ) வழக்குப்பதிவு செய்தனர்.  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், பிரிஜ் பூஷன் மீது எந்த வித விசாரணையும் நடத்தப்பட வில்லை.  போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இது வரை கைது செய்யப்படவும் இல்லை.  இதனால் பிரிஜ் பூஷன் பதவியி லிருந்து விலகும் வரையிலும், சிறையில்  அடைக்கும் வரையிலும் போராட்ட த்தை கைவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  போராட்டத்தை கலைக்க ஒன்றிய மோடி அரசு, உள்துறை பொறுப்பில் உள்ள தில்லி போலீசாரை (குடி போதையில்) களமிறக்கி மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் எதற்கும் அஞ்சா மல் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் கம்பீரமாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சிஐடியு ஆதரவு

இந்நிலையில், மல்யுத்த வீராங்க னைகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக,  ஆம் ஆத்மி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், மாதர் சங்கம், பெண்கள் கூட்டமைப்பு, விவசாய சங்க அமைப்பு கள் என பல்வேறு அமைப்புகளும் நேரடி ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் போராட்டக் களமான தில்லி ஜந்தர் மந்தர்க்கு இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு)  தலைவர்கள் நேரடியாகச் சென்று ஆதரவு வழங்கினர். மேலும் போராட்ட க்களத்தில் சிஐடியு தலைவர் ஏ.ஆர். சிந்து, மல்யுத்த வீரர் - வீராங்கனை களின் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார்.