புலம்பெயர் தொழி லாளர்க்கு, எதிர்க்கட்சி யினர் ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்தும், வாகன ஏற்பாடுகளை செய்து கொடுத்தும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது தான் நாடு முழுவதும் கொரோனா பரவக் காரணம் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை யில், “மோடிக்கு என்னதான் வேண்டும்? அவர் என்னதான் நினைத்துக் கொண் டுள்ளார்? கொரோனா காலத்தில் அவர் நடத்திய பிரம்மாண்ட கூட்டங்களை யெல்லாம் மறந்து விட்டாரா?” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.