states

முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை

புதுதில்லி, அக்.18-  முல்லை பெரியாறு அணை வலு வாக இருப்பதால் இனி அணையின் பாது காப்பு பற்றி பேச எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணை யின் நீர்மட்டத்தை குறைப்பதோடு அணை யின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர் குழு அமைக்க வேண்டும் என கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்நிலையில், வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் அறிக்கை ஒன்று  தாக்கல் செய்யப்பட்டது. அதில், அணை யின் மதகுகள், கதவுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறி யுள்ள ஒன்றிய அரசு, முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.  இந்த வழக்கு அக்டோபர் 25 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசார ணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

;