states

img

கைதூக்கிக் காப்பாற்றிவிட்ட மோடி அரசு உலகின் 19-ஆவது பணக்காரராக ‘முன்னேறினார்’ கவுதம் அதானி!

புதுதில்லி, நவ. 30 - உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் 20 இடங்களுக்குள் கவுதம் அதானி நுழைந்துள்ளார். ஆர்எஸ்எஸ் - பாஜக-வின் செல்லப்பிள்ளையும், பெரும்பணக்கா ரருமான கவுதம் அதானி, கடந்த 2014-இல் உலகப் பணக்காரர் வரிசை யில் 609-ஆவது இடத்தில் இருந்தார். அதன்பிறகு நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசு  பதவிக்கு வந்த கடந்த 8 ஆண்டு களில், 2022-இல் உலகின் 2-ஆவது பெரும்பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறினார். வெறும் 8 பில்லியன் டாலர் சொத்து  மதிப்புடன் இருந்த அவர், 140 பில்லி யன் டாலர் என்ற அசுர வளர்ச்சி  கண்டார். சற்று ஏற்ற இறக்கங்களுடன், உலகின் 3-ஆவது இடத்தில் தொடர்ந்து நீடித்து வந்தார்.  ஆனால், 2023 ஜனவரி 24 அன்று, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ நிறுவனம் அதானி குழுமம் மீது முன்வைத்த, ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானி சாம்ராஜ்யம் சீட்டுக் கட்டு சரிவது போல சரிய ஆரம்பித்தது. ஒரு சில மாதங்களிலேயே பணக்காரர் பட்டியலில் 38-ஆவது இடத்துக்கு போனார்.  

ஆனால், மோடி அரசின் துறைகள் அதானிக்காக தீவிரமாக வேலை பார்த்தன. அரசுத்துறை ஒப்பந்தங்கள் பலவற்றை அதானிக்கே கொடுத் தார்கள். கடைசியாக மும்பை தாராவி நகர மேம்பாடு உட்பட பல ஆயி ரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அதானி குழுமத்திற்கே வழங்கினர். ‘செபி’ மூலமாக ரூ. 17  லட்சத்து 80 ஆயிரம் கோடி மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்தும் அதானி யை ஒரு சிறு கீறல் இல்லாமல் பாதுகாத்தனர். இதனால், பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகளுக்கு மீண்டும் செல்வாக்கு ஏற்படத் துவங்கியது. அதானி குழும பங்குகள் மதிப்பு  உயரத் துவங்கியுள்ளன. செவ்வா யன்று மட்டும் சுமார் ரூ. 1 லட்சத்து 30  ஆயிரம் கோடி அளவிற்கு அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. இதனால், புளூம்பெர்க் உலகப் பணக்காரர் பட்டியலில் அதானி 19- ஆவது இடத்திற்கு முன்னேறியுள் ளார். அவரது சொத்து மதிப்பு 66.7  பில்லியன் டாலர்களாக கணக்கிடப் பட்டு உள்ளது. இந்திய பணக்காரர் களை பொறுத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம் பானி 89.5 பில்லியன் டாலர்களுடன் உலக அளவில் 13-ஆவது பெரும் பணக்காரராக உள்ளார்.