பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் உள்ளது ஞானவாபி மசூதி. இம்மசூதி இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக கூறி, கடந்த 2022இல் மசூதிக்கு அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அங்கம் வகிக்கும் 5 பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மசூதியில் சிவலிங்கம் உள்ளி ட்ட பொருட்களை கைப்பற்றி யதாக இந்திய தொல்லியல்துறை (ஏஎஸ்ஐ) அறிக்கை வெளியிட, வார ணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா, ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துமத பூஜை செய்ய ஜனவரி மாதம் 31-ஆம் தேதி உத்தரவு வழங்கினார். மேலும் ஞான வாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என்றும், வழிபாடு நடத்துவதற்காக அர்ச்சகரை நியமிக்க காசி விஸ்வ நாதர் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் தருணத்தில் அஜய கிருஷ்ண விஷ்வேஷாவின் உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உயர்பதவி இந்நிலையில், இந்து தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்த வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஷ் வேஷாவிற்கு மாநில அரசு அதிகாரி அந்தஸ்து கொண்ட லோக்பால் (பல் கலைக்கழகத்தின் குறைதீர் அதிகாரி யாக) பொறுப்பை வழங்கியுள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு. ஓய்வு பெறும் கடைசி நாளில் ஞானவாபி மசூ திக்குள் இந்துக்கள் வழிபாடு செய்ய லாம் என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கி யிருப்பதும், ஓய்வு பெற்ற பின் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில அரசின் கீழ் லோக்பால் பதவிக்கு நிய மிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சை யை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
வாரணாசி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஞான வாபி மசூதி நிர்வாகம் அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 26 அன்று நீதிபதி ரஞ்சன் அகர்வால் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ஞானவாபி மசூதி நிர்வாகம் அளித்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து வழிபாடு செய்யலாம் என உத்தரவிட்டார் நீதிபதி ரஞ்சன் அகர்வால். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை வெள்ளியன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப் படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.